கல்லூரி மாணவி மர்மச்சாவு

நித்திரவிளை அருக கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தார். அவரது காதலன் திருமணத்துக்கு மறுத்து ஏமாற்றியதால் விஷம் குடித்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி மர்மச்சாவு
Published on

கொல்லங்கோடு, 

நித்திரவிளை அருக கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தார். அவரது காதலன் திருமணத்துக்கு மறுத்து ஏமாற்றியதால் விஷம் குடித்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கல்லூரி மாணவி

நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது56), கூலித்தொழிலாளி. இவருக்கு தங்கபாய் (51) என்ற மனைவியும் 3 மகள்களும் இருந்தனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணமானது. 3-வது மகள் அபிதா (19) களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அபிதா நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் அவரை திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு மறுப்பு

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாலிபரின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அபிதாவை திருமணம் சய்ய வாலிபர் மறுத்துள்ளார். இதையடுத்து அபிதா வீட்டில் யாரிடமும் அதிகம் பேசாமல் சோகமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காலை வீட்டில் இருந்த அபிதா திடீரென வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். அவரை பெற்றோர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்த பின்பு மேல்சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்ச பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மாணவியின் தாயார் நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com