மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
Published on

கடலூர்,

கடலூர் அருகே மலைஅடி குப்பம் கிராமத்திற்கு தடையை மீறி முந்திரி கன்றுகள் நடும் விழாவிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் அருகே மலைஅடி குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் வளர்க்கப்பட்ட முந்திரி மரங்கள் 2 மாதங்களுக்கு முன்னர் வெட்டப்பட்டன; இதனை எதிர்த்து முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக சென்ற சண்முகம், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விவாசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com