திங்கள்சந்தை அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

திங்கள்சந்தை அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திங்கள்சந்தை அருகே உள்ள ஆலங்கோடு புதுகாடுவெட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது57). கொத்தனார். இவருடைய மனைவி தங்கபாய் (49). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று செல்லப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெளியே சென்றிருந்த அவருடைய மனைவி தங்கபாய் பிற்பகல் 3 மணிக்கு வந்தார். அப்போது வீட்டில் செல்லப்பன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்லப்பன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தங்கபாய் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com