கொத்தனார் தற்கொலை

கொத்தனார் விஷம்குடித்து தற்கொலை செய்தார்.
கொத்தனார் தற்கொலை
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் சுலைமான் (வயது 29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் மதுபோதையில் இருந்தபோது இவருக்கும், இவரது மனைவி அன்னலெட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுலைமான் வாழ்க்கையில் வெறுப்படைந்து களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி அன்னலெட்சுமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுலைமானுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com