சிதம்பரத்தில் வாலிபரை கொன்ற மேஸ்திரி கைது

சிதம்பரத்தில் வாலிபரை கொன்ற மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் வாலிபரை கொன்ற மேஸ்திரி கைது
Published on

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அய்யப்பன்(வயது 23). இவர் கண்ணங்குடி பகுதியில் உள்ள, தனது உறவினரான செல்லதுரை வீட்டில் தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி கண்ணங்குடி சுடுகாடு அருகே பாசிமுத்தான் ஓடையில், அய்யப்பன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி சந்துரு என்கிற சந்திரசேகரனை(40) சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் அய்யப்பனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

வாய்த்தகராறு

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சந்திரசேகரனும், அய்யப்பனின் தங்கையும் பழகி வந்துள்ளனர். இதை அய்யப்பன் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி, அய்யப்பனும், சந்திரசேகரனும் பாசிமுத்தான் ஓடை அருகே மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், தான் கொண்டு வந்த இரும்பு கம்பியால் அய்யப்பனை சரமரியாக தாக்கியுள்ளார். பின்னர் உடலை ஓடையில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சந்திரசேகரனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com