கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மாணவி மாயம்

கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மாணவி மாயம்
Published on

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வளையகார மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வடலூர் சத்திய ஞானசபை அருகில் சுற்றித்திரிந்த மாணவியை, மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் மீட்டு, கடலூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த மாணவி, காப்பகத்தில் தங்கியிருந்து வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காப்பகத்தில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com