தண்டையார்பேட்டையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி: மேயர் பிரியா ஆய்வு


தண்டையார்பேட்டையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி: மேயர் பிரியா ஆய்வு
x

தண்டையார்பேட்டையில் நடந்து வரும் பாலம் கட்டும் பணி, விளையாட்டு வளாகம் கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டும் பணி, குளம் தூர்வாருதல், விளையாட்டு வளாகம் கட்டும் பணி, கால்வாய் மறுசீரமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேயர் பிரியா இன்று, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்கள், வார்டு-45 மற்றும் 71க்கு உட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் 678 மீட்டர் நீளம் மற்றும் 15.2 மீட்டர் அகலத்தில் நான்கு வழி கொண்ட இருவழி பாதையாகும். மேலும், ெரயில்வே இருப்புப் பாதையின் மேல் 58 மீட்டர் நீளத்திற்கு Bowstring வடிவில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், அந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர், வார்டு-46ல், குட்ஷெட் சாலையில் உள்ள ெரயில்வே குளத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ெரயில்வே குளம் 9,240 சதுர மீட்டர் பரப்பளவில் 27,720 கனமீட்டர் (2,77,20,000 லிட்டர்) கொள்ளளவுடன் ஏற்கெனவே இருந்தது. தற்போது 29,790 சதுர மீட்டர் பரப்பளவில் 89,370 கனமீட்டர் (8,93,70,000 லிட்டர்) கொள்ளளவு திறனுடன் நீர் சேமிக்கும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், அந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் வார்டு 37ல், வியாசர்பாடி, முல்லைநகர் பேருந்து நிலையம் அருகில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 380.07 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் விளையாட்டுக்கூட வளாகத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விளையாட்டுக்கூடத்தில் தரைத்தளத்தில் உடற்பயிற்சிக் கூடம், சேமிப்பு அறையும், முதல் தளத்தில் நவீன திறன் மேம்பாட்டு மையம், வரவேற்பறை, பொருள் வைப்பு அறையும், இரண்டாம் தளத்தில் தங்கும் அறையும் மூன்று தளங்களிலும் பொதுக் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், அந்த பணிகளை தரமாகவும், விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக வார்டு 35, 37 மற்றும் 41ல் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கே.கே.டி.நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள கொடுங்கையூர் பிரதான கால்வாயில் ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் 1894 மீட்டர் நீளத்தில் கடும்பாடியம்மன் கோயில் முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச் சுவரினை உயர்த்தி கட்டப்பட்டு வரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது பெரம்பூர் எம்.எல்.ஏ. சேகர், ஆணையாளர் குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் வினய், துணை ஆணையாளர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி (பணிகள்), பிரதிவிராஜ் (வருவாய் (ம) நிதி), தண்டையார்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி யு.கணேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் டில்லிபாபு, கோபிநாத், ஆனந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 More update

Next Story