மனைவி கோபித்து சென்றதால் மெக்கானிக் தற்கொலை

மனைவி கோபித்து சென்றதால் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி கோபித்து சென்றதால் மெக்கானிக் தற்கொலை
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மங்களம் கிராமம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவரது மகன் கலையரசன் (வயது 25). இருசக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி சுபலட்சுமி(25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கலையரசன் தற்போது மேலமாத்தூரில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சுபலட்சுமிக்கு குடும்ப செலவிற்காக அவர் பணம் கொடுக்காததால் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. மேலும் கடந்த 20-ந் தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, சுபலட்சுமி மேலமாத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். பின்னர் கலையரசன், சுபலட்சுமியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கலையரசன் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுபலட்சுமி குன்னம் போலீசில் அளித்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com