மக்களை தேடி மருத்துவம்

மக்களை தேடி மருத்துவம் நடைபெற்றது.
மக்களை தேடி மருத்துவம்
Published on

கரூர் மாவட்டம் புகழூர் அருகே முருகம்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று மருத்துவம் பார்த்தனர். இதில் வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com