மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

தம்மம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மேஸ்திரி இறந்தார்.
மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி
Published on

தம்மம்பட்டி

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சியில் கல் ஒட்டர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை புதுப்பிப்பதற்காக வேலை நடந்து வருகிறது. மல்லியகரையை அடுத்த கோபாலபுரம் சத்யா நகரை சார்ந்த மேஸ்திரி வரதராஜன் (வயது 55) கோவில் கட்டிடத்தின் மீது ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வரதராஜனை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரதராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com