முழு ஊரடங்கு ரத்து; இனி வழக்கம்போல் சேவை -மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இனி வழக்கம் போல் மெட்ரோ சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு ரத்து; இனி வழக்கம்போல் சேவை -மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுபோக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மெட்ரோ ரெயில் சேவை குறைந்த அளவில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, இனி வழக்கம் போல மெட்ரோ சேவை இயங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 முதல் 10 நிமிட கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com