மதுரையில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்


மதுரையில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 6 Oct 2025 10:59 AM IST (Updated: 6 Oct 2025 11:28 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அவனியாபுரம் பகுதியில் எம்ஜிஆர் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை ,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது. புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.

இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story