மிலாது நபி: இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்- முதல் அமைச்சர்

மிலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிலாது நபி: இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்- முதல் அமைச்சர்
Published on

சென்னை,

முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் மிலாது நபி திருநாள் வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-

அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சமுதாய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டுபவராகவும், கருணையின் அடையாளமாகவும் விளங்கியவர்.

கோபம், பொறாமை புறம்பேசுதல் ஆகியவற்றை அறவே துறந்து உயரிய பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித சமுதாயத்திற்கு சொன்னவர்.

ஏழை எளியோருக்கு உணவளியுங்கள் என்ற மகத்தான மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்.

அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுறைகளும் செழுமையான வழிகாட்டுதல்களும் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைபிடிக்கவேண்டியவை மட்டுமின்றி அவை பொன்னேபோல் போற்றி ஒழுகி பாதுகாக்கப்பட வேண்டியவை.

அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளம் கணிந்த மிலாதுன் நபித்திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com