பெண் ஊழியருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மில் மேலாளர் தற்கொலை - போலீசார் விசாரணை

ஆலங்குடி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் ஊழியருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மில் மேலாளர் தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

ஆலங்குடி,

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). இவர் புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள தனியார் ஆயில் மில்லில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த மில்லில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக ரவிச்சந்திரன் பணியாற்றி வருகின்றார். இப்படி இருக்கையில் மில்லில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் ரவிச்சந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக மில்லின் உரிமையாளர் அலாவுதீன் கடந்த 14-ம் தேதி கண்டித்து உள்ளார்

இதனால் மனமுடை ரவிச்சந்திரன் மில் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர்.

இதனை அறிந்த மில் ஊழியர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ரவிச்சரந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com