

சென்னை,
சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எங்கள் கட்சியில் இருந்து வந்தவர். எங்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு நான் வந்த போது, என்னை அழைத்து சென்று என்னுடைய உறவினர் என்று எனக்காக பேசியவர். எனக்கு மிகவும் நெருக்கமானவர். அன்பானவர். நேரு அண்ணனுக்கும் உறவினர்.’ என்றார்.
அவருடைய பேச்சை கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சிரித்தபடி அமர்ந்திருந்தார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், ‘அவர் அமைதியாக அமர்ந்திருக்கிறார். எதற்கு அவரை போட்டு கொத்து விடுகிறீர்கள் என்று தெரியவில்லையே? என்று கேட்டார் இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.