ரூ.33.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடம் - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அப்பாவு நகர், சாஸ்திரி நகர் பிரதான நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை இன்று மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
ரூ.33.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடம் - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அடையாறு மண்டலம், வார்டு-169, அப்பாவு நகர், சாஸ்திரி நகர் பிரதான சாலையில் மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 33.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை இன்று (21.02.2026) திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கினங்க, பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. அவ்வாறாக அடையாறு மண்டலத்தில் சாஸ்திரி நகரில் மாநகராட்சியின் மூலதன நிதியில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களால் ரூபாய் 33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, உடற்பயிற்சி மேற்கொண்டார்.

முன்னதாக, இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டல அலுவலர் செந்தில் குமரன், கண்காணிப்பு பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com