அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிய அமைச்சர் சிவசங்கர்

ஓட்டுநரின் இருக்கைக்கு பின்னுள்ள இருக்கையில் அமர்ந்துபடியே தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிய அமைச்சர் சிவசங்கர்
Published on

சென்னை,

சென்னையில் நேற்று தனது வழக்கமான அலுவல்களை முடித்துக் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைப் பேருந்து மூலம் ஊர் திரும்பியுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

முதலில் பயணிகளிடம் பேருந்து சேவையில் ஏதும் குறைபாடு உள்ளதா? எனக் கேட்டறிந்தவர், பின்னர் ஓட்டுநரின் இருக்கைக்கு பின்னுள்ள இருக்கையில் அமர்ந்துபடியே தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அவர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com