

மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமி கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அந்த பகுதியில் நடந்து வந்த கோவில் திருவிழாவை ஒட்டி நடக்கும் பொருட்காட்சிக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் தன்னை 4 பேர் துன்புறுத்தியதாக சிறுமி, தனது தாயாரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் உடனடியாக புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த போலீசார் சிறுமியை கூட்டாக பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில், 4 சிறார்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் மூவருக்கு 16 வயது எனவும் ஒருவருக்கு 13 வயது எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.