எதிர்பார்ப்புகளற்ற அன்பு இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் - இளைய தலைமுறையினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார்.
திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவதிக்கும் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 50-வது திருமண நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக - என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்! அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி! எதிர்பார்ப்புகளற்ற அன்பும் - விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






