

விருதுநகர் லட்சுமி காலனி பகுதியில் குடியிருப்புகளுக்குள் குரங்குகள் நுழைந்து அல்லல்படுத்தும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிலும் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.