மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும் நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விஸ்வநாதபேரி துணைமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் கீழ்க்கண்ட இடங்களில் இருக்காது. அதன்படி சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






