மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

கோவில்பட்டி துணைமின் நிலையம், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி துணைமின் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை:
கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோவில்பட்டி டவுண், காந்திநகர், திலகர்நகர், இந்திரா நகர் வடக்கு, தெற்கு, அத்தைகொண்டான், சீனிவாசாநகர், கிருஷ்ணாநகர், மீனாட்சி நகர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, மஞ்சு நகர், ஆலம்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம், ராமலிங்கபுரம், முத்துசாமிபுரம், வீரவாஞ்சிநகர், கதிரேசன்கோவில் ரோடு, சுபா நகர் மற்றும் புதிய பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மாதங்கோவில், இளையரசனேந்தல் ரோடு, மூப்பன்பட்டி, VMS நகர், புதுக்கிராம், வேலாயுதபுரம், வள்ளுவர் நகர், மார்கெட் ரோடு, கடலை காரத்தெரு, செக்கடி தெரு, கடலையூர் ரோடு, லாயல் மில் காலனி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை:
திருச்செந்தூர் கோட்டத்துக்குட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம், உடன்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் இடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாத்தான்குளம் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயாா்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூா், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகளிலும், நாசரேத் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை ஆகிய பகுதிகளிலும், செம்மறிக்குளம் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை ஆகிய பகுதிகளிலும், நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, சாலைப்புதூா், கடகுளம், இடைச்சிவிளை, பனைவிளை, மணிநகா், பூச்சிக்காடு, அதிசயபுரம், பிரகாசபுரம், தச்சன்விளை, படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளிலும்,
பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்கலம், மீரான்குளம், தோ்க்கன்குளம், ஆசிா்வாதபுரம், கருங்கடல், கோமனேரி ஆகிய பகுதிகளிலும், உடன்குடி துணை மின் நிலையத்தைச் சேரந்த உடன்குடி, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம், தைக்காவூா், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, நாலுமூலைக்கிணறு, நா.முத்தையாபுரம், சீருடையார்புரம், வீரப்பநாடார் குடியிருப்பு, கரிசன்விளை, எள்ளுவிளை, குதிரைமொழி, தேரிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






