மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்பு

மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்கப்பட்டனர். இளம்பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்பு
Published on

பிணமாக கிடந்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 40). இவரது மகள் அஞ்சாலை (22). கடந்த சில மாதங்களுக்கு முன் அஞ்சாலைக்கும் உறவினரான சின்னத்தம்பி (30) என்பவருக்கும் திருமணமானது.

இவர்கள் 3 பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு அவர்கள் 3 பேரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வசந்தா மற்றும் அவரது மருமகனான சின்னத்தம்பி பிணமாக கிடந்தனர். அஞ்சாலை மட்டும் சுய நினைவின்றி கிடந்தார்.

மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா?

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க அங்கு விரைந்து சென்ற சித்தாமூர் போலீசார் இறந்த இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமாக இருந்த அஞ்சாலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா? எரி சாராயம் குடித்தார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com