திருமங்கலம் அருகே சாலையோர தடுப்புச்சுவரில் கார் மோதி தாய்-மகன் பலி; 3 பேர் படுகாயம்

திருமங்கலம் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் கார் மோதியதில் தாய், மகன் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமங்கலம் அருகே சாலையோர தடுப்புச்சுவரில் கார் மோதி தாய்-மகன் பலி; 3 பேர் படுகாயம்
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் கார் மோதியதில் தாய், மகன் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் மோதியது

திருப்பூர் ராசய்யா காலனியை சேர்ந்தவர் லட்சுமி(வயது 43). இவர்களது மகன்கள் கார்த்திக் என்ற கருப்பசாமி, வினோத் (24), பேரன் பிரவீன்குமார். இவர்கள் 4 பேரும் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவில் காரில் புறப்பட்டனர். இவர்களுடன் உறவினர் ஆனந்த் மனைவி நாகலட்சுமி (37) என்பவரும் வந்தார். காரை கருப்பசாமி ஓட்டினார்.

நேற்று அதிகாலை திருமங்கலம்-விருதுநகர் நான்குவழிச்சாலையில் கரிசல்பட்டி மேம்பாலத்தில் கார் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி

தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி, அவரது தாயார் லட்சுமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com