காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; அண்ணன் பலி - தங்கை படுகாயம்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; அண்ணன் பலி - தங்கை படுகாயம்
Published on

மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்

காஞ்சீபுரம் அடுத்த திம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஜினகாஞ்சி நகரில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 57). சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு பட்டு வளர்ச்சி துறையில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். பாலாஜி தனது தங்கை ஆஷாபீபியுடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் இருந்து திம்ம சமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஒலிமுகமது பேட்டை அருகே வெள்ளை கேட் பகுதியில் செல்லும்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பஸ் பாலாஜி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இதில் பாலாஜியும் அவரது தங்கையும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்த போது பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. பாலாஜியின் தங்கைக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com