ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கொத்தனார் பலி

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கொத்தனார் பலி
Published on

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவகுமார் (14). இதில் சரவணன் கூனிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவகுமார் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி புறப்பட்டனர்.

அம்மம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே சென்னை பெரம்பூர் மங்கலாபுரம் 3-வது தெருவை சேர்ந்த கொத்தனார் ராஜசேகர் (வயது 54), இவரது மகள் நான்சி (23) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com