மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
Published on

கண்ணமங்கலம்

மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

களம்பூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் கமலக்கண்ணன் (வயது 31) நெல்மண்டியில் மூட்டைத்தூக்கும் தொழிலாளியாக உள்ளார். கண்ணமங்கலம் பேரூராட்சி குப்பை கிடங்கு முன்பு நிறுத்தியிருந்த இவரது மோட்டார்சைக்கிளை மர்மநபர் திருடிச்சென்றிருந்தார்.

இதுகுறித்து கமலக்கண்ணன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் வேலூர் கொணவட்டம் மசூதி தெருவில் வசிக்கும் டிரம்ஸ் வேலை பார்க்கும் அருள் மகன் வெங்கடேசன் (17) என்பவர் கமலக் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com