மோட்டார் சைக்கிள்கள் மோதி 4 பேர் படுகாயம்

வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதி 4 பேர் படுகாயம்
Published on

நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்களான நித்தியானந்தம், ஆனந்தகுமார், ராமராஜ் ஆகிய 4 பேரும் அய்யலூரில் உள்ள வண்டி கருப்பணசாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை பைபாஸ் பிரிவு அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த நித்தியானந்தம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com