முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் கார் உற்பத்திக்காக கூடுதலாக 15,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்தாகிறது. இதனால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இது மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரையிலான முதலீடுகள் அடுத்த 7-10 ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com