முள்ளிவாய்க்கால் நினைவுதினம்: மண்ணில் புதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம் - விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுதினம்: மண்ணில் புதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம் - விஜய்
Published on

சென்னை,

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் பேரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தையொட்டி, த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com