நடத்தையில் சந்தேகம்:கர்ப்பிணி மனைவி கொலை கணவனுக்கு தூக்கு - தேனி நீதிமன்றம்

நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு ஆளாக்கி கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நடத்தையில் சந்தேகம்:கர்ப்பிணி மனைவி கொலை கணவனுக்கு தூக்கு - தேனி நீதிமன்றம்
Published on

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி கற்பகவள்ளி. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுரேஷ் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறு ஒன்றில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதில் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். . இதுகுறித்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றவாளி சுரேசிற்கு 10000 ரூபாய் அபராதமும் சாகும்வரை தூக்கு தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com