மகனின் மர்ம மரணம்: "மருமகள் மேல தான் சந்தேகம்" - பெற்றோர் பரபரப்பு புகார்...!

மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின்பேரில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மகனின் மர்ம மரணம்: "மருமகள் மேல தான் சந்தேகம்" - பெற்றோர் பரபரப்பு புகார்...!
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நவீன் குமார் (வயது 29). முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விசித்ரா (24). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நவீன்குமாரை அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான சீனிவாசன் (26) கட்டாயப்படுத்தி மது அருந்த அழைத்துச் சென்றார். மது அருந்திய சிறிது நேரத்திலேயே நவீன் குமாருக்கு வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் அவரது வீட்டுக்கு கொண்டுச்சென்றனர். மாலையில் நவீன் குமார் இறந்துவிட்டார்.

அதிக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என நினைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீன் குமார் உடலை புதைத்து விட்டனர். இந்தநிலையில் விசித்ரா, சீனிவாசனிடம் பலமுறை போனில் பேசியது தெரியவந்தது. இதுகுறித்து நவீன்குமாரின் தாய் சாந்தி தனது மருமகள் விசித்திரா மீதும், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் நேற்று திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் முன்னிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள், நவின் குமாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பிரேதப் பரிசோதனை முடிவுக்கு பின்னர் நவீன்குமார் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா?, அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? என்பது தெரிய வரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com