தொழிலாளி மர்ம சாவு

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
தொழிலாளி மர்ம சாவு
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகாராஜன், மனைவி மீது சந்தேகம் அடைந்து அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று காலை மகாராஜன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகராஜன் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மகராஜன் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com