பொதுமக்களுக்கு விசில் வழங்கி கொண்டாடிய என்.ஆனந்த்

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விசில் வழங்கி கொண்டாடிய என்.ஆனந்த்
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்தது.

இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் சென்னையில் கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு விசில் வழங்கியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com