நல்லமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

திருப்பூண்டி அருகே நல்லமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
நல்லமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
Published on

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த சடையன்கோட்டகம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த நல்ல முத்து மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக குடமுழுக்கையொட்டி அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 4-ம் கால யாகசாலை பூஜை முடிவுற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com