நாமக்கல் தினசரி சந்தையில்சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனைவிவசாயிகள் கவலை

நாமக்கல் தினசரி சந்தையில்சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனைவிவசாயிகள் கவலை
Published on

நாமக்கல் தினசரி சந்தையில் நேற்று சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பூக்கள் விலை விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 3 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. இதனால் அவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

கடந்த 1-ந் தேதி கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.260-க்கும், 1-ந் தேதி கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகள் கவலை

இதேபோல் கடந்த 1-ந் தேதி கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ.10-க்கும், கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.130-க்கும் விற்பனையானது.

பொதுவாக சம்பங்கி பூக்கள் மார்க்கெட்டிற்கு 500 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 1 டன் வரை விற்பனைக்கு வருவதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சம்பங்கி பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com