நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்: தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த மாரிசெல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்: தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த மாரிசெல்வராஜ்
Published on

மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;-நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com