நெசவாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா

நெசவாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
நெசவாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா
Published on

விவேகானந்தா கைத்தறி பட்டு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் மாநில வளர்ச்சி சங்கத்தின் சார்பில் மத்திய அரசால் இயங்கிவரும் காஞ்சீபுரம் நெசவாளர் சேவா மையம் சார்பில் உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வாலாஜாவில் நெசவாளர்களுக்கு நெசவாளர் தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் வாலாஜா, ஆற்காடு, திமிரி, பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்று தேசிய அடையாள அட்டைய பெற்றுக் கொண்டனர். அதில் விவேகானந்தா கைத்தறி நெசவாளர் சங்க நிறுவன தலைவர் விஜயகுமார், மாநில பொதுச் செயலாளர் கேசவன், மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் வெங்கடேசன், நடராஜன், ஆற்காடு மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com