மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
Published on

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் மருத்துவ முகாம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 185 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) முருகேசன், சிறப்பு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com