அறச்சலூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

அறச்சலூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
அறச்சலூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

அறச்சலூர் அருகே உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் ஆண்பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் அந்த பகுதியில் வசிப்பவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com