போடி அருகே பஸ் மோதி வாலிபர் படுகாயம்

போடி அருகே பஸ் மோதி வாலிபர் படுகாயமடைந்தார்
போடி அருகே பஸ் மோதி வாலிபர் படுகாயம்
Published on

சின்னமனூர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 23). இவர் நேற்று போடி-சங்கராபுரம் சாலையில் நாகலாபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே போடி நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் பஸ் டிரைவரான செந்தில் (39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com