கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Published on

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் குமணன் (வயது 22). இவருக்கும், கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயதுடைய மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை குமணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமடைந்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குமணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com