கண்டமனூர் அருகே நிழற்குடையில் முதியவர் பிணம்

கண்டமனூர் அருகே நிழற்குடையில் முதியவர் பிணம் கிடந்தது.
கண்டமனூர் அருகே நிழற்குடையில் முதியவர் பிணம்
Published on

கண்டமனூர் அருகே குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நிழற்குடையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் கண்டமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் இறந்தவர், கடந்த 8 ஆண்டுகளாக பொதுமக்களிடம் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்த பார்த்தசாரதி (வயது 80) என்பதும், முதுமை காரணமாக நோய் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com