நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா

நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.
நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா
Published on

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள கடையனோடை சேகரம் தங்கையாபுரம் தூய பேதுருவின் ஆலய 109-வது பிரதிஷ்டை விழா 5 நாட்கள் நடைபெற்றது. முதல் 3 நாட்கள் மாலையில் ஊரைச் சுற்றி ஜெப பவனியும், பின்னர் ஸ்தோத்திர ஆராதனையும், அதனை தொடர்ந்து கன்வென்ஷன் கூட்டங்களும் நடந்தது. நாசரேத் காபிரியேல் நற்செய்தி குழுவினர் பாடல்கள் பாடினர். சென்னை இயேசுவே ஆதாரம் ஊழியங்களின் நிறுவனர் டேனியல் தேவ செய்தி வழங்கினார். 4-வது நாள் மாலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடந்தது. ஸ்பிக் நகர் சேகர குரு ரூபன் தனசிங் அருட்செய்தி வழங்கினார். அன்று இரவு 109-வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. சீயோன் நகர் சேகரகுரு ரவி சிறப்பு செய்தி வழங்கினார். 5-வது நாள் மதியம் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சேகர குரு ஆசீர் சாமுவேல், சபை ஊழியர் செல்வின் ஞானக்கண், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்லப்பா மற்றும் தங்கையாபுரம் சபையார், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com