பழனி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

பழனி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
பழனி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

பழனி அருகே உள்ள கோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை. இவரது மகன் பசுபதிபாண்டி (வயது 32). கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பிள்ளை, தனது நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பாண்டிமுருகன் (51) என்பவருக்கு விற்றதாக தெரிகிறது. இதனால் பசுபதிபாண்டி, பாண்டிமுருகனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று கோதமங்கலம் பகுதியில் வைத்து பாண்டிமுருகன், பசுபதிபாண்டி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாண்டிகுமார், தான் வைத்திருந்த அரிவாளால் பசுபதிபாண்டியை வெட்டினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com