பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் சேதம்

பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் சேதம்
Published on

பெண்ணாடம், 

பெண்ணாடம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் முருகன்குடி அய்யனார்கோவில் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (45) என்பவரது வீட்டின் மாடியில் மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதேபோல் மின்னல் தாக்கியதில் அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்விளக்குகள், டிவி, பேன், பிரிட்ஜ் மற்றும் மின் ஒயர்கள் முற்றிலும் கருகி சேதமடைந்தன. நள்ளிரவில் மின்னல் தாக்கி வீடு மற்றும் மின்சாதன பொருட்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com