சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

விவசாயி சாவு
சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
Published on

சத்தியமங்கலம் வரதம்பாளையம் ஓட்ட குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). விவசாயி. அவருடைய மனைவி ரேவதி (32). இவர்களுக்கு அபினவ் சரண் (7) என்ற மகன் உள்ளார். பழனிச்சாமியின் வீட்டையொட்டி உள்ள தோட்டத்தில் 100 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பழனிச்சாமி விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி 100 அடி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று கிணற்றில் மயங்கிய நிலையில் இருந்த பழனிச்சாமியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, பழனிச்சாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com