

தேனி அருகே கோடாங்கிபட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை போடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானதிருப்பதி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தியபடி ஊரில் உள்ள தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.