விளாத்திகுளம் அருகேமாட்டுவண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
விளாத்திகுளம் அருகேமாட்டுவண்டி பந்தயம்
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், கருப்பசாமி திருக்கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் விளாத்திகுளம்- சிவஞானபுரம் சாலையில் நடந்தது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை மார்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் சாலையின் இருபுறம் கூடி நின்று கண்டுகளித்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சிறந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com