சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து பணிமனைகள் - போக்குவரத்து கழகம் திட்டம்

சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து பணிமனைகள் அமைக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து பணிமனைகள் - போக்குவரத்து கழகம் திட்டம்
Published on

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து பணிமனைகள் அமைக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இரவு நேரங்களில் புறநகர் பகுதிகளில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள கிளாம்பாக்கம் உட்பட 7 புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து பணிமனைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் தற்போது 31 பணிமனைகள் உள்ளன. இதன்மூலம் 629 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com